அரசு மருத்துவமனைகளில் இனி 3 ஷிப்ட்களாக பணி ! தமிழக அரசு அறிவிப்பு !

அரசு மருத்துவமனைகளில் இனி 3 ஷிப்ட்களாக பணி. தமிழ்நாட்டில் உள்ள மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறையின் கீழ் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களின் வேலை நேரத்தை தற்போது ஷிப்ட் மாற்றியமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை மருத்துவகல்லூரி மருத்துவமனைகள், நகர்ப்புற மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கடைநிலை ஊழியர்களுக்கு 3 Shift Timing அடிப்படையில் பணி நேரத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.

சென்னை மெட்ரோவில் ஒருநாள் சுற்றுலா அட்டை ! ரூ.100 கட்டணம் செலுத்தி அளவற்ற பயணங்களை மேற்கொள்ளலாம் !

அந்த வகையில் காலை 6 மணி முதல் 1 மணி வரை, மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரை, இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என மூன்று ஷிப்ட்களாக பணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 50% பணியாளர்கள் முதல் ஷிப்ட்டிலும், 25% பணியாளர்கள் இரண்டாவது ஷிப்ட்டிலும், இரவு நேரத்தில் 25% பணியாளர்களும் பணியில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment