அந்தமானில் மோசமான வானிலை ! 142 பயணிகளுடன் சென்ற விமானம் சென்னை வந்ததது – மீண்டும் நாளை இயக்கப்படும் என ஆகாஷா ஏர்லைன்ஸ் அறிவிப்பு !

அந்தமானில் மோசமான வானிலை. அந்தமான் தீவுகளுக்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம். அந்த வகையில் சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றி சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம் மோசமான வானிலை காரணமாக தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பியது குறிப்பிடத்தக்கது.

சென்னை விமானநிலையத்திலிருந்து 142 பயணிகளுடன் அந்தமான் நோக்கி சென்ற ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், இந்நிலையில் அந்தமானுக்கு அருகில் சென்றபோது அங்கு நிலவிவரும் மோசமான வானிலை காரணமாக அங்குள்ள விமானநிலையத்தில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்தது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலம் தொடர்பான வழக்கு ! தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !

இதன் காரணமாக இன்று இயக்கப்பட்ட அந்தமான் விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், மீண்டும் நாளை அந்தமானுக்கு புறப்பட்டு செல்லும் என்று ஆகாஷா ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Leave a Comment