கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் மார்ச்சுக்குள் 1.19 லட்சம் கான்கிரீட் வீடுகள் – ஊரக வளர்ச்சித்துறை தகவல் !

தமிழ்நாட்டில் கலைஞர் கனவு இல்ல திட்டத்தில் மார்ச்சுக்குள் 1.19 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது. kalaignar kanavu illam scheme

தமிழ்நாடு அரசு சார்பில் வாசிக்க வீடு இல்லாதவர்கள் மற்றும் குடியில் வாழும் ஏழை மக்களுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டதின் மூலம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு மார்ச் மாதத்திற்குள் 1.19 லட்சம் கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. kalaignar kanavu illam scheme 1.19 lakh concrete houses by March Rural Development Department Information

இதனை தொடர்ந்து ரூ.3500 கோடியில் வீடுகள் கட்டப்பட்டு வருவதாக ஊரக வளர்ச்சித்துறை கூறியுள்ளது. அத்துடன் தலா ரூ.3.5 லட்சம் மதிப்பீட்டில் 1.19 லட்சம் வீடுகள் கட்டும் பணி தற்போது 85% முடிவடைந்து விட்டதாகவும், வரும் மார்ச் மாதத்திற்குள் 1.19 லட்சம் கான்கிரீட் வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் சிஎம்சியில் இருந்து துரை தயாநிதி டிஸ்சார்ஜ் – உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக தகவல் !

மேலும் கலைஞர் கனவு இல்லத் திட்டத்தில் 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment