தமிழக அரசின் ஔவையார் விருது 2024 ! பெண்களுக்கு அறிய வாய்ப்பு !

தற்போது தமிழக அரசின் ஔவையார் விருது 2024 மூலம் சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் மகளிருக்கு சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 ம் தேதியன்று ஒவ்வொரு ஆண்டும் முதலமைச்சர் அவர்களால் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறுபவர்களுக்கு 1.50 லட்சத்திற்க்கான காசோலை, பொன்னாடை, சான்றிதழ் போன்றவை வழங்கப்படும்.

தமிழ்நாட்டினை பிறப்பிடமாகவும் 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பெண்குலத்திற்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகள், சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மத நல்லிணக்கம், மொழித்தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிக்கை, நிர்வாகம் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் மகளிராக இருக்க வேண்டும்.

பெண்களுக்கான இச் சமூக சேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதுக்கு ஏற்றுக்கொள்ளப்படமுடியாது

சென்னை மாவட்ட பொது மக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான விண்ணப்பங்களை (https://awards.tn.gov.in) என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

31.12.2024 தேதி வரை தமிழ்நாடு அரசின் ஔவையார் விருதிற்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW

அத்துடன் இணயத்தளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் மற்றும் மற்ற அனைத்து தேவையான சான்றிதகளுடன் இணைத்து முழுமையான தமிழ் மற்றும் ஆங்கில கையேடுகளை தலா 3 நகல்களை 03.01.2025 தேதிக்குள் மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்.

Leave a Comment