DABUR தொழிற்சாலைக்கு சுற்றுசூழல் அனுமதி! மதிப்பீட்டு ஆணையம் அறிவிப்பு!

தற்போது DABUR தொழிற்சாலைக்கு சுற்றுசூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியது. DABUR factory Environmental clearance approval

திண்டிவனம் சிப்காட் உணவுப் பூங்காவில் ரூ.400 கோடியில் டாபர் நிறுவன தொழிற்சாலைக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம். சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. அந்த வகையில் 1.36 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமையும் டாபர் தொழிற்சாலையில் தேன், டாபர் ரெட், ரோஸ் வாட்டர் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் ரூ.400 கோடியில் அமையும் டாபர் நிறுவன தொழிற்சாலை மூலம் 250 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்

இதனை தொடர்ந்து தொழிற்சாலை கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி டாபர் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. டாபர் நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலனை செய்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியது.

Leave a Comment