சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம் – குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு !

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம். கடந்த ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா பதவி எற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து அவருக்கு கவர்னர் ஆர்.என். ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அந்த வகையில் ஓராண்டு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பணியாற்றிய கங்காபூர்வாலாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் நாளையுடன் அவர் பணி ஓய்வு பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவனை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். மேலும் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.வி. கங்காபூர்வாலா நாளை ஓய்வு பெற உள்ள நிலையில் மூத்த நீதிபதியாக உள்ள மகாதேவனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடைக்கு நோட்டீஸ் – அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் நடவடிக்கை !

நாளை மறுநாள் 24ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தொடர்பான பணிகளை ஆர்.மகாதேவன் கவனிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a Comment