சிலை கடத்தல் வழக்கு விவகாரம் – காவல்துறை ஐஜி பொன்மாணிக்க வேலுக்கு முன்ஜாமீன் – சிபிஐ எதிர்ப்பு !

தற்போது சிலை கடத்தல் வழக்கு விவகாரம் தொடர்பாக காவல்துறை ஐஜி பொன்மாணிக்க வேலுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட் கிளையில் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் கடந்த 2005 ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் திருடுபோயின. அவ்வாறு திருடு போன சிலைகளில் 6 சிலைகள் விருதுநகர் மாவட்டம் ஆலப்பட்டியில் கடந்த 2008 ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டன.

அத்துடன் இந்த சிலைகளை மீட்ட போலீசார் அவற்றை சர்வதேச கும்பலுடன் சேர்ந்து வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் விற்க உதவியதாகப் புகார் எழுந்ததை தொடர்ந்து,

அப்போது சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக இருந்த பொன்.மாணிக்கவேல் விசாரணை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வழக்கில் துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த காதர் பாஷா மற்றும் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக இருந்த சுப்புராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனையடுத்து திருநெல்வேலி பழவூர் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தீனதயாளனை தப்பிக்க வைக்கவே அவருடன் சேர்ந்து தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் பொய் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும்,

மேலும் அவர் மீது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காதர் பாஷா வழக்கு தொடர்ந்தார்.

சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டம் (PMLA) வழக்கு – உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

பொன்.மாணிக்கவேல் மற்றும் காதர் பாஷா ஆகிய இருவரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டியதால் இந்த வழக்கானது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் சிலை கடத்தல் வழக்கில் முன்னாள் காவல்துறை ஐஜி பொன்.மாணிக்கவேலுக்கு முன்ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பு கடும் எதிப்பு தெரிவித்துள்ளது.

மேலும் பொன்.மாணிக்கவேலை கைது செய்து விசாரித்தால்தான் சிலை கடத்தல் தொடர்பான உண்மைகள் வெளிவரும் என சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

Leave a Comment