சென்ட்ரலுக்கு மாற்றாக கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் – முழு விவரம் இதோ !

தற்போது ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்ட்ரலுக்கு மாற்றாக கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில்கள் பற்றிய தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் புதிதாக உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் என்ற புயல் போல் உருவாக இருப்பதாக ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

அதன்படி, இன்று பிற்பகல், ஃபெஞ்சல் புயல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கரையை கடக்கும் பொழுது மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று கூறப்படுகிறது.

மேலும் இன்று காலை முதல் சென்னை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் சில விரைவு ரயில்கள் இன்று கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகின்றன.

(நள்ளிரவு 12 .30 ) சென்னை – கொல்லம் சிறப்பு ரயில்

(இரவு 11.55 ) சென்னை – ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ்

(இரவு 8 மணி ) சென்னை – திருவனந்தபுரம் ரயில்

(11.30 இரவு ) சென்னை – பெங்களூரு மெயில்

(இரவு 11 மணி ) சென்னை – கோவை அதிவிரைவு ரயில்

(இரவு 10.30 ) கோவை சேரன் எக்ஸ்பிரஸ்

போன்ற ரயில்கள் சென்னை சென்ட்ரலுக்கு மாற்றாக கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment