IPL 2025 போட்டிகள் ரத்தாகிறதா? இந்தியாவின் ஆப்ரேஷன் சிந்தூர் எதிரொலி || BCCI விளக்கம் !

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு நடவடிக்கையாக ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நீதி நிலைநாட்டப்பட்டது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடியாக தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 3 பயங்கரவாத அமைப்புகளுடைய 9 தீவிரவாதிகள் முகாம்கள் மீது குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. நீண்ட தூரம் பயணிக்கும் ஏவுகணையை கொண்டு இந்தியா ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் நடைபெற்று வரும் IPL போட்டிகள் குறித்து BCCI அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் IPL அட்டவணை படி போட்டிகள் நடைபெறும் என்றும், பஞ்சாப் போன்ற எல்லை பகுதிகளில் நடைபெறும் போட்டிகள் மட்டும் வேறு மைதானங்களுக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்ட்டுள்ளது.

Leave a Comment