கேரளாவில் ஓணம் நாளில் மட்டும் 124 கோடிக்கு மது விற்பனை – கடந்த ஆண்டை விட அதிகம் என தகவல் !

தற்போது கேரளாவில் ஓணம் நாளில் மட்டும் 124 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மேலும் இது கடந்த ஆண்டை விட ரூ.4 கோடி அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலத்தில் புத்தாண்டு மற்றும் ஓணம் பண்டிகையின் போது மது விற்பனை என்பது எப்போதும் அதிகளவில் இருக்கும். அந்த வகையில்

அந்த வகையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகை வயநாடு நிலச்சரிவில் ஏற்பட்ட உயிர்ப்பலி காரணமாக கேரள அரசு சார்பில் ஓணம் கொண்டாட்டம் நடைபெறாது என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் கேரள மக்கள் ஓணம் பண்டிகைக்கு கடந்த சில நாட்களாக தயாராகி வந்தனர்.

எனவே கேரளாவில் பண்டிகை காலங்களில் வழக்கம் போல் மது விற்பனையும் அதிகமாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு மாநிலத்தில் பார்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

Tupperware நிறுவனம் திவால் என அறிவிக்க கோரிக்கை – கடும் நிதி நெருக்கடியால் முடிவு என தகவல் !

இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு பண்டிகை கால கட்டத்தில் ரூ.715 கோடிக்கு மது விற்பனையானது என்றும், ஆனால் இந்த ஆண்டு ரூ.701 கோடிக்கு தான் விற்பனை நடைபெற்றுள்ளது. மேலும் கடந்த ஆண்டை விட ரூ.14 கோடி குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் ஓணம் நாளில் மட்டும் ரூ.124 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. மேலும் இது கடந்த ஆண்டை விட ரூ.4 கோடி அதிகமாகும்.

Leave a Comment