திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை – பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் !
காட்டு விலங்குகள் ஊருக்குள் வரும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை யை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பத்தூரில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை
JOIN WHATSAPP TO GET DAILY NEWS
பள்ளியில் புகுந்த சிறுத்தை :
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்குள் இன்று சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. இந்நிலையில் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து பள்ளி மாணவர்களை பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் சிறுத்தையை தேடும் பணியிலும் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கொல்கத்தா அக்ரோபோலிஸ் வணிக வளாகத்தில் தீ விபத்து – தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர் !
இந்நிலையில் சிறுத்தையை தாக்கியதில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சிறுத்தை புகுந்த இந்த தனியார் பள்ளி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையால் அந்த பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.