தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு 2025! 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை விண்ணப்பிக்கலாம்!

சிவகங்கை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் அறிவிப்பு 2025 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறர்கள்.

இந்தநிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களை தொடங்கியுள்ளது. அதன் படி பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் உருவாகியுள்ளது. இதற்காக தமிழக அரசோடு இணைந்து வேலை வாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்து வருகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது

சிவகங்கை மாவட்ட தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமிற்கு 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, போன்ற கல்வி தகுதி பெற்ற நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து 10,01,2025 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 2.00 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW

மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து கொள்ளலாம். அத்துடன் சிவகங்கை மாவட்டத்தை சார்ந்த வேலை நாடுநர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறர்கள்.

Leave a Comment