தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் ! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட். தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் வருகிற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது 24ஆம் தேதி வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் (19 மற்றும் 20 ஆம் தேதிகளில்) அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கொல்லிமலை நீர்விழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை ! நாமக்கல் மாவட்ட வனத்துறை அறிவிப்பு !

இதனையடுத்து வரும் மே 21, 22 மற்றும் 23 போன்ற தேதிகளில் மிகக் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment