வங்கக்கடலில் உருவாகிறது ரீமால் புயல் – இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் !

வங்கக்கடலில் உருவாகிறது ரீமால் புயல். வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது, இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய மழையும், வரும் 25 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை மிதமானது முதல் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அத்துடன் வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, வலிமையான காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. அந்த வகையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அதன்பிறகு தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து 25 ஆம் தேதி புயலாக உருவாகும். இந்த புயலுக்கு “ரீமால்” என பெயரிடப்பட்டுள்ளது.

பிஎஸ்சி நர்சிங் மற்றும் பி பார்ம் இன்று முதல் விண்ணப்பப்பதிவு தொடக்கம் – விண்ணப்பிக்க லிங்க் உள்ளே !

மேலும் இந்த புயலானது வரும் 26ஆம் தேதி மாலை மேற்குவங்காளத்திற்கு அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனையடுத்து புயலானது வடக்குப்பகுதியில் நகரும்போது தமிழகத்தில் மழையின் அளவு குறைந்து வெப்பம் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment