தமிழ்நாட்டில் HMPV வைரஸ் பாதிப்பு.., முக கவசம் அணிவது கட்டாயம்?.., அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி!!

இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் HMPV வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக  முக கவசம் அணிவது கட்டாயம் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சீனாவில் 2019 ஆம் ஆண்டு உருவான கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது HMPV வைரஸ் என்ற புதிய வகை வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த தொற்று சீனாவில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்கு தான் அதிகமாக பரவி வருகிறது. சீனாவை தொடர்ந்து, இந்தியாவில் 7 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் HMPV வைரஸ் குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ” HMPV வைரஸ் பற்றிய செய்திகள் வெளியான அடுத்த நாளே அரசு கண்காணிக்க தொடங்கி விட்டது. மேலும் இந்த வைரஸ் புதிதல்ல, 50 ஆண்டுகளுக்கு முன்பே இந்த வைரஸ் இருந்துள்ளது.

கொரோனா போல வீரியமான வைரஸ் இல்லை என்று உலக சுகாதார மையமும் அறிவுறுத்தியுள்ளது. இருந்தாலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முக கவசம் மற்றும் தனி மனித இடைவெளி அவசியம் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை மற்றும் சேலம் மாவட்டத்தில் தலா ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

திபெத் – நேபாளம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 36 பேர் பலி.., இந்தியாவிலும் பாதிப்பு?

தமிழகத்தில் நாளை (08.01.2025) மின்தடை பகுதிகள்! மாவட்ட வாரியாக பவர் கட் விவரம்!

பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுத்தால் ரூ.1000 பரிசு – மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!

ஜனவரி 17ம் தேதி விடுமுறை அறிவிப்பு.., பொங்கலுக்கு 6 நாட்கள் லீவு.., குஷியில் மக்கள்!!

சென்னையில் 2 குழந்தைகளுக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி! இந்தியாவில் வேகமெடுக்கும் வைரஸ் பரவல்!

Leave a Comment