டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.., எப்படி விண்ணப்பிப்பது?

2025-26 கல்வி ஆண்டுக்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று ண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

எம்பிஏ மற்றும் எம் சி ஏ உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை தான் டான்செட் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது 2025-26 கல்வி ஆண்டுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த ஆண்டுக்கான டான்செட்  நுழைவுத்தேர்வு வருகிற மார்ச் 22ஆம் தேதி நடைபெற இருக்கிறது. எனவே இளநிலை பட்டப்படிப்பு முடித்த அல்லது இறுதி செமஸ்டர் எழுதும் மாணவர்கள் இந்த தேர்வு எழுத தகுதி உள்ளவர்கள் இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று(ஜனவரி 24) முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் விண்ணப்பிக்க பிப்ரவரி 21ஆம் தேதி கடைசி தேதி என்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு துறை செயலாளர் ஸ்ரீதரன் என்பவர் தெரிவித்துள்ளார். எனவே, டான்செட்  நுழைவு தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் உடனடியாக tancet.annauniv.edu என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (25.01.2025)! TNEB வெளியிட்ட அறிவிப்பு!

மத்திய பட்ஜெட் 2025-2026ல் வரி விலக்குக்கு வாய்ப்பு.., வரி செலுத்துவோருக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Leave a Comment