நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி – தமிழ்நாடு அரசு அறிவிப்பு !

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி. தற்போதுள்ள சூழலில் தனியார் வேலைவாய்ப்பை விட பட்டதாரி இளைஞர்கள் அரசாங்க வேலை பெறுவதில் அதிக முனைப்பு காட்டி வருகின்றனர். இதன் காரணமாக TNPSC, RRB, SSC உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் வெற்றி பெற கடினமாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் இவ்வாறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் நபர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சிக்கு வரும் ஜூலை 14 ஆம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சராகிறாரா அண்ணாமலை ? – பெயர் பரிசீலனையில் உள்ளதாக தகவல் !

மேலும் இந்த நுழைவு தேர்வுக்கு www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையத்தளத்தில் வரும் ஜூன் 8 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் வங்கித்தேர்வுகள், SSC மற்றும் ரயில்வே துறை தேர்வுகளுக்கு எளிமையாக பயிற்சி மேற்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment