TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!

தேர்வாணையம் நடத்தும் TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வாணையம் அரசு பணியில் இருக்கும் பல்வேறு காலிப் பணியிடங்களை தேர்வுகள் நடத்தி ஊழியர்களை தேர்ந்தெடுத்து வருகிறது. எனவே, எப்படியாவது அரசு வேலையை கையில் வாங்கி விட வேண்டும் என்று பலரும் போட்டி போட்டு வருகின்றனர். அதற்காக தனியார் பயிற்சி நிலையங்களில் அதிகமாக பணம் கட்டி தங்களை தயார் படுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் வீட்டிலேயே வைத்து படித்து வருகின்றனர்.

இப்படி இருக்கையில் தமிழக அரசு சார்பாக இலவசமாகவே பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, ” கிண்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 10-01-2025 முதல் TNPSC-GROUP-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்க இருக்கிறது.

மேலும் இந்த வகுப்பு திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. எனவே இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் நபர்கள்  விண்ணப்பப்படிவ நகலுடன் உங்களுடைய ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோவுடன் கிண்டி  மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். மேலும்,  விவரங்களுக்கு, [email protected] என்ற மெயிலுக்கு தொடர்பு கொள்ளலாம். 

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

Oneplus 13R இந்தியாவில் அறிமுகம்! ஆத்தி ஒரு போன் இவ்வளவு ரூபாயா?  

தமிழக அரசின் நம்மை காக்கும் 48 திட்டத்திற்கான காப்பீட்டுத்தொகை அதிகரிப்பு – அரசாணை வெளியீடு!

ISROவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமணம் .., தமிழ்நாட்டை சேர்ந்தவர்?.., அவர் யார் தெரியுமா?

கலைஞர் மகளிர் உரிமை தொகை.., 3 மாதத்தில் இவர்களுக்கும் ரூ. 1000.., உதயநிதி அறிவிப்பு!!!

அஜித்தின் ரேஸ் கார் திடீர் விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!

Leave a Comment