நாளை முதல் மே 20 வரை ஊட்டிக்கு வருவதை தவிர்க்கலாம் ! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !

நாளை முதல் மே 20 வரை ஊட்டிக்கு வருவதை தவிர்க்கலாம். தற்போது தமிழகத்தில் பரவலாக அனைத்து இடங்களிலும் மழை பெய்து வருகிறது. மேலும் இந்த மழைபொழிவானது வரும் காலங்களில் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் அடுத்த மூன்று நாட்களுக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்க்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் உதகையில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு ஊட்டிக்கு வருவதை சுற்றுலா பயணிகள் தவிர்க்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர்கல்வியில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு உத்தரவு !

மேலும் மிக கனமழை பெய்தாலும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

Leave a Comment