பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் சரத்குமார் ! மோடி பிரதமரானால் நாடு வளம் பெறும் என அறிக்கை – போட்டியிடும் தொகுதி குறித்து விரைவில் அறிவிப்பு !

பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் சரத்குமார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பல்வேறு கட்சிகளும் எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது மற்றும் எந்ததெந்த தொகுதிகளில் தகுதி வாய்ந்த நபர்களை வேட்பாளர்களாக அறிவிப்பது போன்ற தேர்தல் நடவடிக்கைகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தற்போது கூட்டணி தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தற்போது நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடப்போவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜகவுடன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கை கோர்த்திருக்கிறோம்.

‘வில்லேஜ் ஃபுட் பேக்டரி’ சேனலில் ஆபாச படங்கள் – அதிர்ந்து போன ஃபாலோவர்ஸ்.., விளக்கம் கொடுத்த டாடி ஆறுமுகம்!!

இதன் மூலம் ஒற்றுமையுணர்வு ஓங்கி நாடு வளம் பெறும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

Leave a Comment