அடக்கடவுளே.., நடிகர் அஜித்குமார் திடீரென மருத்துவமனையில் அனுமதி.., மேனேஜர் சொன்ன ஷாக் தகவல்!!

நடிகர் அஜித்குமார்

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் அஜித்குமார். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற்ற, நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அவருடன் இணைந்து திரிஷா, அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.  இதனால் படத்தோட எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சியுட்டும் விதமாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

அதாவது நடிகர் அஜித்குமார் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவருடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா கூறுகையில், ‘ நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக வெளிநாடு செல்ல இருப்பதால் வழக்கமான பரிசோதனைக்காக அவர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது பரிசோதனை போய் கொண்டிருக்கும் நிலையில், நாளை அவர் வீடு திரும்புவார் என கூறியுள்ளார். இருப்பினும் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று கடவுளை பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

எச்சரிக்கை.., தமிழகத்தில் குழந்தைகள் கடத்தப் போவதாக வந்த செய்தி.., காவல்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை!!

Leave a Comment