வெயில் ஓவரா இருக்கா? அப்ப இங்க போய் சூட்டை தணிங்க மக்களே – குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!

தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் தற்போது குற்றாலத்தில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். சொல்ல போனால் தங்களின் சூட்டை தணிக்க பெரும்பாலான மக்கள் நீர் நிலையங்களை தேடி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் உள்ள தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த சில நாட்களாக  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அனைத்து அருவிகளும் வறண்ட நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் பெய்து வரும் கோடை மழையின் காரணமாக மலைப்பகுதிகளில் கனமழை அதிகமாக பெய்து வருகிறது.

இதனால் தற்போது குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி  மெயின் அருவி,  புலியருவி,  ஐந்தருவி, சிற்றருவி மற்றும் பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகமாக காணப்பட்டு வருகிறது. எனவே சுற்றுலா பயணிகளுக்கு தற்போது குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தொடர்ந்து கோடை விடுமுறை நாட்களை வர இருப்பதால் குற்றாலத்தை நோக்கி சுற்றுலா பயணிகள் அதிகாலை முதலே அதிகளவில் வருகை தருகின்றனர்.

தனுஷை மகன் என உரிமை கொண்டாடிய கதிரேசன் காலமானார் – இனி வழக்கு எடுபடுமா?

Leave a Comment