கவுண்டமணி நிலம் தொடர்பான விவகாரம் – மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

கவுண்டமணி நிலம் தொடர்பான விவகாரம்: தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை கொண்டாடப்படும் நடிகர் என்றால் அது கவுண்டர்களால் பெரிய பெரிய நடிகர்களை திணற வைத்த கவுண்டமணி தான். தற்போது ஒரு அரசியல் படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இவர் கடந்த 1996 ஆண்டு  சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் இருக்கும் நளினி என்பவருக்கு சொந்தமான 5 கிரவுண்ட் நிலத்தை வாங்கியுள்ளார். மேலும் அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டி தர பிரபல தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார்.

ஆனால் அந்த நிறுவனம் குறிப்பிட்ட நேரத்தில் கட்டி தரவில்லை என்பதால் கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து. இதையடுத்து அந்த நிலத்தை அவருக்கு திரும்ப கொடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அந்த நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தொடர்ந்து வழக்கு நடைபெற்று வந்த நிலையில் தற்போது உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது தனியார் நிறுவனம் அந்த நிலத்தை கவுண்டமணியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதுமட்டுமின்றி வழக்கை தள்ளுபடியும் செய்தது. 

தமிழகத்தில் 11ம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை 2024 – எப்போது தெரியுமா?  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

Leave a Comment