கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி – அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

கோவில் திருவிழாவில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பலி. கோபி செட்டியாம்பாளையத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பரண் கிடாய் பூசையில் ஆட்டுக்கிடாவை வெட்டி அதன் ரத்தத்துடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிட்ட பூசாரி பழனிச்சாமி உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்டோருக்கு சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு பூசாரி மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆட்டுகிடாயை வெட்டி அதன் ரத்தத்தை குடித்த பூசாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஆட்டு ரத்தம் குடித்த பூசாரி பழனிச்சாமி நேற்று கோவிலுக்கு அருகில் உள்ள பகுதியில் திடீரென மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதனையடுத்து உடனே அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!!

மேலும் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பூசாரி பழனிச்சாமி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment