தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி இருக்கும்? முழு அப்டேட் இதோ!!

Weather Report Today: தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு வானிலை எப்படி இருக்கும்: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் ஜூலை 15ம் தேதி வரை கனமழை பெய்ய கூடும்.

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதுமட்டுமின்றி குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும், அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Also Read: KKR அணியின் புதிய ஆலோசகர் யார் தெரியுமா? – அப்ப கவுதம் கம்பீர் நிலைமை என்ன?

குறிப்பாக  நகரின் ஒரு சில பகுதிகளில் காலை மாலை இரவு வேளையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment