இந்த பகுதியில் நாளை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை – வெளியான முக்கிய அறிவிப்பு!

Breaking news: இந்த பகுதியில் நாளை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ(ISRO) தொடர்ந்து பூமியை கண்காணிக்கும் விதமாக செயற்கைக்கோளை அனுப்பி வைக்கின்றனர். அந்த வகையில் தற்போது பூமியை கண்காணிக்கும் செயல்பாடுகளுக்காக 175.5 கிலோ எடை மற்றும் 420 வாட்ஸ் ஆற்றலை உருவாக்கும் திறன் கொண்ட அதிநவீன இ.ஒ.எஸ்-08 எனும் செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது.

அதன்படி நாளை ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து  சிறிய ரக எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் மூலம் சரியாக காலை 9.17 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் நாளை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

மேலும் இந்த இ.ஓ.எஸ்-08 செயற்கைக்கோளில் குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிஃப்ளெக்டோமெட்ரி பேலோட் (GNSS-R) ,  எஸ்.ஐ.சி யுவி டோசிமீட்டர் (SiC UV Dosimeter) மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோட் (EOIR) ஆகிய முக்கிய ஆய்வுக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

Also Read: முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படைவீரர்களுக்கான அசத்தலான அறிவிப்பு!!

மேலும் இந்த செயற்கைகோள் மூலமாக பூமியில் நடக்கும் பேரிடர் கண்காணிப்பு,  எரிமலை செயல்பாட்டைக் கண்காணித்தல், சுற்றுச்சூழல் கண்காணிப்பு, தொழில்துறை மற்றும் மின் நிலைய பேரிடர்களை கண்காணித்தல் போன்றவைகளை கண்காணிக்க இந்த செயற்கைக்கோள் பயனுள்ளதாக இருக்கும். sslv d3 rocket

இந்நிலையில் பழவேற்காடு மீனவர்களுக்கு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, நாளை எஸ்.எஸ்.எல்.வி-டி3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருப்பதால், பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. Forest fishermen

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

விமான பயணிகளுக்கு ஷாக்கிங் நியூஸ்

ஒளிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை வரைவு மசோதா வாபஸ்

சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 பேருக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்

Leave a Comment