Infosys-க்கு 238 கோடி அபராதம் – எதற்காக தெரியுமா? வெளியான ஷாக்கிங் தகவல்!

பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனமான Infosys-க்கு 238 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது.

இன்போசிஸ்:

பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் தான் இன்போசிஸ். இந்த நிறுவனத்தின் நிறுவனராக நாராயணமூர்த்தி இருந்து வருகிறார். மேலும் இந்த நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட 22 நாடுகளில் கிளை உள்ளது. எனவே மொத்தமாக இங்கு 1.4 லட்சம் பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.

இந்நிலையில் வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு H1B தொழில் விசா பெற வேண்டிய இடத்தில், B-1 பார்வையாளர் விசாக்களை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து, அமெரிக்க குடிவரவு அமைப்பான (ICE) விசாரணை நடத்தி வந்தது. அந்த விசாரணையின் போது குற்றச்சாட்டு நிரூபிக்கபட்டது.

மேலும் இந்த தவறின் மூலமாக ஊதியம் மற்றும் தொழிலாளர் நல திட்டங்கள் ஆகியவற்றின் செலவுகளை தவிர்க்க முயன்றதாக சொல்லப்படுகிறது. இந்த குற்றத்திற்காக, Infosys-க்கு 238 கோடி அபராதம் என்று ICE தெரிவித்துள்ளது. மேலும் அதற்கு இன்போசிஸ் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் இதுவரை விதிக்கப்பட்ட மிகப்பெரிய அபராதங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்தடையா? இதோ முழு விவரம்!
இன்றைய தங்கம் விலை நிலவரம் (30.11.2024) ! சரிவை சந்தித்து வரும் கோல்ட் ரேட் !
இன்று பிற்பகல் கரையை கடக்கும்  ஃபெஞ்சல் புயல் – சென்னைக்கு வரப்போகும் புதிய ஆபத்து!
நாளை (நவ.30) பள்ளி கல்லூரிகளுக்கு லீவு – எந்த மாவட்டத்துக்கு தெரியுமா?
கல்லூரி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி UG பட்டப்படிப்பை 2 வருடத்தில் முடிக்கலாம் – UGC அறிவிப்பு!
ஹெல்மெட் மாற்றி நிச்சயதார்த்தம் செய்த ஜோடி? அடடே இப்படி ஒரு காரணமா?
தவெக கட்சியில் இணைந்த வாழை பட சிறுவன் – இணையத்தை கலக்கும் புகைப்படம்!

Leave a Comment