அம்ரித் பாரத் திட்டம் 2025 – புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை திறந்து வைத்தார் மோடி..!

அம்ரித் பாரத் திட்டம் 2025 கீழ் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அம்ரித் பாரத் திட்டம் 2025

இந்த திட்டத்தில் 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

முதல் கட்டமாக புதுப்பிக்கும் பணிகள் முடிந்த 103 ரயில் நிலையங்கள் இன்று திறக்கப்பட்டன.

தமிழகத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட பரங்கிமலை உட்பட 9 ரயில் நிலையங்கள் திறந்து வைப்பு.

TN Govt Exams 2025: TNPSC 615 Non-Interview காலிப்பணியிடங்கள் அறிவிப்பு 2025! கடைசி தேதி: 25.06.2025!

பரங்கிமலை, ஸ்ரீரங்கம், போளூர், திருவண்ணாமலை, விருதாச்சலம், சாமல்பட்டி, குழித்துறை, சிதம்பரம், மன்னார்குடி ஆகிய 9 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

புதுவை ரயில் நிலையம் மற்றும் ஆந்திராவில் சூலூர்பேட்டை மற்றும் கேரளாவில் 3 ரயில் நிலையங்கள் என தெற்கு ரயில்வேக்கு கீழ் வரும் 13 ரயில் நிலையங்கள் திறக்கப்பட்டன.

WhatsApp ChannelJoin Now
Telegram ChannelJoin Now
Employment News in TamilClick Here

இந்த ரயில் நிலையங்களில் கூடுதல் அறைகள், லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் நடைமேடைகள், பயணிகள் காத்திருப்பு அறைகள், நுழைவு வாயில்கள் சீரமைப்பு, நகரும் படிக்கட்டுகள், பன்னடுக்கு வாகன நிறுத்தங்கள், கண்காணிப்பு கேமராக்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

“மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் ஓடுகிறது”- பிரதமர் மோடி.

பாரத மாதாவின் சேவகனான மோடி, நெஞ்சை நிமிர்த்தி இங்கே நிற்கிறேன்.

மோடியின் எண்ணம் நிதானமாகத்தான் இருக்கும். ஆனால், மோடியின் ரத்தம் கொதிக்கிறது.

பிரதமர் மோடி பேச்சு:

மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை சிந்தூர்தான் (குங்குமம்) ஓடுகிறது-ராஜஸ்தான் மாநிலம் பிகனேரில் ‘ஆபரேஷன் சிந்தூரை’ குறிப்பிட்டு பிரதமர் மோடி பேச்சு.

பாகிஸ்தானுடன் வர்த்தகமோ பேச்சு வார்த்தையோ கிடையாது”

பயங்கரவாதிகளின் 9 மறைவிடங்களை 22 நிமிடங்களில் அழித்தோம்.

மக்கள் ஆசியாலும், ராணுவத்தின் வீரத்தாலும் பயங்கரவாதிகளை அழிப்போம் என்ற உறுதி மொழியை நிறைவேற்றியுள்ளோம்.

3 படைகளும் சேர்ந்து ஒரு சக்கர வியூகத்தை உருவாக்கி பாக்.-ஐ மண்டியிட வைத்தனர்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil May 2025

இந்தியாவுக்கு சொந்தமான தண்ணீரை பாகிஸ்தான் பெறாது.

இந்தியர்களின் ரத்தத்துடன் விளையாடுவதற்கு பாகிஸ்தான் பெரும் விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்.

பாகிஸ்தானுடன் வர்த்தகமோ பேச்சு வார்த்தையோ கிடையாது.

பாகிஸ்தானால் இந்தியாவை நேரடியாக வெல்ல முடியாததால் பயங்கரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்துகிறது-பிரதமர் மோடி.

இன்றைய தலைப்பு செய்திகள் 22 May 2025:

Leave a Comment