தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை மனிஷா யாதவ். குறிப்பாக அவர் நடிப்பில் வெளியான வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவருக்கு எந்த பட வாய்ப்பு கிடைக்காமல் போன நிலையில், சென்னை 28 பார்ட் 2வில் ஐட்டம் படக்குழு நடனமாட தொடங்கினார். அதற்கு பிறகும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காததால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!

இந்நிலையில் நினைவெல்லாம் நீயடா என்ற படத்தின் மூலம் மீண்டும் நடிகையாக நடிக்க தொடங்கி உள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 23ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை மனிஷா யாதவ் ” நினைவெல்லாம் நீயடா ” படத்தின் தயாரிப்பாளர் மீது புகார் கொடுத்துள்ளார். அதாவது இந்த படத்தில் நடிக்க 3 லட்சம் பேசப்பட்டுள்ள நிலையில் கொஞ்சம் பாக்கி வைத்ததாக கூறி புகார் கொடுத்துள்ளார். மேலும் படம் வெளியாகும் சூழலில் அதை வசூலித்து தர வேண்டும் என்று மனிஷா குறிப்பிட்டு உள்ளார்.
விண்ணில் பறக்க போகும் Naughty Boy “ஜி.எஸ்.எல்.வி” ராக்கெட்.., முழு பணியில் தயராக இருக்கும் இஸ்ரோ விஞ்ஞானிகள்!!
