முதலிரவில் கணவனுக்கு கண்டிஷன் போட்ட மனைவி.., மோமோஸால் புருஷன் மீது புகார் கொடுத்த சம்பவம்!!

கணவனுக்கு கண்டிஷன் போட்ட மனைவி

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மல்புரா என்ற பகுதியில் வாழ்ந்து வந்த ஒரு பெண்ணுக்கும், பினாஹட்டை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் சமீபத்தில் கல்யாணம் நடந்து முடிந்தது. அப்போது முதலிரவில் மனைவி கணவனிடம் தனக்கு மோமோஸ் ரொம்ப பிடிக்கும் என்றும் தினமும் இரவு வேலை முடிந்து வரும் பொழுது மோமோஸுடன் தான் வரவேண்டும் என்று கணவனுக்கு கண்டிஷன் போட்டுள்ளார். அதன்படி கணவன் தினமும் வாங்கி கொடுத்துள்ளார். ஆனால் ஒரு சில சமயத்தில் அவரால் வாங்கி கொடுக்க முடியாமல் போனது. இதனால் கோபமடைந்த மனைவி அவருடைய தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், போலீசில் புகாரளித்துள்ளார்.

இது குறித்து காவல்துறை விசாரணை நிலையில், கணவன் தான் வேலை முடிந்து வர சமயத்தில் மோமோஸ் கடை இருப்பதில்லை என்று ஒரு சில நாட்கள் மோமோஸ்  கிடைப்பதில்லை என்றும் அதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும் என கணவர் தெரிவித்துள்ளார். ஆனால், மனைவி அதை ஏற்றுக் கொள்ளாத நிலையில், மோமோஸுடன் வந்தால்தான் அவரோட வாழ்வேன் என்று என கறாராக கூறியுள்ளார். இதையடுத்து கணவன் வாங்கி தருவதாக  உறுதியளித்த பின் மனைவி குடும்பம் நடத்துவதாக சம்மதம் தெரிவித்துள்ளார்.  

தளபதி விஜய் கூட அரசியலுக்கு வருகிறேன்?.., பரபரப்பு பேட்டி கொடுத்த நடிகர் பிரசாந்த்.., ஒரு வேலை இருக்குமோ?

Leave a Comment