தளபதி விஜய் மகன் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் !

தற்போது தளபதி விஜய் மகன் இயக்கத்தில் நடிகர் சந்தீப் கிஷன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் இளையதளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக இருக்கிறார். அத்துடன் இவருடைய படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தத்க்கது. அந்த வகையில் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிறது என்று சொல்லலாம். தற்போது ஜேசன் சஞ்சய் படத்துக்கான கதையை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன என்பது குறிப்பிடதக்கது.

இதனையடுத்து பல்வேறு முன்னணி இயக்குநர்கள் நடிகராக நடிக்க வைக்க அணுகிய போதிலும் ஜேசன் சஞ்சய் மறுத்துவிட்டார். அத்துடன் இயக்குநராக அறிமுகமாக வேண்டும் என்பதில் முனைப்புடன் இருக்கிறார் என்று கூறப்படுகிறது.

மேலும் அவருடைய கதையின் நாயகனாக சந்தீப் கிஷன் நடிப்பது தற்போது உறுதியாகி இருக்கிறது.

மேலும் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகிறது.

இதனை தொடர்ந்து விரைவில் இந்தக் கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் கூறப்பட்டுள்ளது.

மனைவி ஆர்த்தியை டைவர்ஸ் செய்தார் ஜெயம் ரவி – என்ன காரணம் தெரியுமா? அதிகாரபூர்வமாக வெளிவந்த அறிவிப்பு!

அதன் பிறகு முதலில் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்று தான் ஜேசன் சஞ்சய் விரும்பினார் ஆனால் யாரிடமும் தேதிகள் இல்லாத காரணத்தினால் இப்போது சந்தீப் கிஷனை வைத்து படத்தினைத் தொடங்கவுள்ளார். அத்துடன் சந்தீப் கிஷன் உடன் நடிக்கும் நடிகர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Leave a Comment