திருமணத்திற்காக உருவாக்கப்பட்ட விமான நிலையம் ! சர்வதேச அந்தஸ்த்து வழங்கிய மத்திய அரசு – விழாவில் பங்கேற்ற முக்கிய பிரபலங்கள் !

திருமணத்திற்காக உருவாக்கப்பட்ட விமான நிலையம். உலக பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவை முன்னிட்டு இந்தியாவின் திரைபிரபலங்கள், முக்கியத்தலைவர்கள் மட்டுமல்லாமல் உலக அளவில் முக்கியஸ்தர்கள் இந்த விழாவில் பங்கேற்க இருப்பதால் போக்குவரத்து காரணங்கள் கருதி ஒரு விமனநிலையமே தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவையொட்டி குஜராத் மாநிலத்தில் உள்ள ஜாம் நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச விமான நிலைய அந்தஸ்தை மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும் முகேஷ் அம்பானி வீட்டு திருமண விழாவிற்கு பில்கேட்ஸ் உள்ளிட்ட உலகின் முன்னணி தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் வருவதற்கு வசதியாக சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

பாஜக கட்சியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்?.,. மக்களவை தேர்தலில் போட்டி?.., அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

ஜாம் நகர் விமான நிலையத்தில் வழக்கமாக ஒரு நாளில் 6 முதல் 10 விமானங்கள் வரை கையாளும் விமான நிலையத்தில் நேற்று மட்டும் 140 விமானங்கள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment