சென்னை உட்பட 9 துறைமுகங்களில் உருவாகும் புயல் – எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

Breaking News: சென்னை உட்பட 9 துறைமுகங்களில் உருவாகும் புயல்: தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பெய்து வருகிறது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தற்போது வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதால் ஒடிசா, ஆந்திராவில் உள்ள கடலோர பகுதியில்  இருந்து வட மேற்கு மற்றும் மேற்கு பகுதியில் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள கடலோர பகுதிகளில் சூறாவளி உருவாகி கடலில் ராட்சத அலைகள் எழ அதிக வாய்ப்பு இருக்கிறது. cyclone

இதனை தொடர்ந்து பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதையடுத்து கடல் பகுதியை கொண்ட தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை,  தூத்துக்குடி, காரைக்கால், எண்ணூர், புதுச்சேரி,  கடலூர், காட்டுப்பள்ளி, பாம்பன் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய 9 துறைமுகங்களில் வானிலை ஆய்வு மையம்  புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. weather tomorrow

Also Read: தமிழகத்தில் 27 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!

அதுமட்டுமின்றி சென்னையில் அடுத்த 24 மணி நேரமும் வானம் கருமேகத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் மேற்கொண்ட  9 கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதியில் வாழும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. weather today

Leave a Comment