குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி: வெள்ள நிவாரண நிதி அறிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு தலா 2 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நிவாரணம்:

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பொழிந்து வருகிறது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில், அப்பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதியுதவி அறிவித்து முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, கனமழை காரணமாக விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், கடந்த 2 நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2000 வழங்கப்படும்.

மேலும்,  பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூபாய் 8500 இழப்பீடு வழங்கப்படும். கால்நடைகளின் உயிரிழப்புக்கு ரூபாய் 37500 நிவாரணமும்,  செம்மறி ஆடு உயிரிழப்பு ரூபாய் 4000 நிவாரணமும், கோழிக்கு 100 ரூபாயும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

மன்சூர் அலிகான் மகனிடம் காவல்துறை விசாரணை – எதற்கு தெரியுமா?
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் – முதல்வர் அதிரடி அறிவிப்பு!
திருவண்ணாமலை மண்சரிவு விவகாரம் – இரண்டு பேர் உடல் கண்டெடுப்பு!
திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மீண்டும் நிலச்சரிவு – குலுங்கும் தி.மலை !
TNEB வெளியிட்ட நாளை மின்தடை (04.12.2024) பகுதிகள் – மாவட்டம் தோறும் பவர் கட் விவரம் உள்ளே !
டிசம்பர் 3ம் தேதி உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்தில் தெரியுமா? மாணவர்கள் குஷி!
தமிழக அரசின் ஔவையார் விருது 2024 ! பெண்களுக்கு அறிய வாய்ப்பு !
தமிழகத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின்தடையா? இதோ முழு விவரம்!

Leave a Comment