விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை – விஜயபிரபாகரனுக்கு தேர்தல் ஆணையம் பதில் !

நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு பதிலளித்துள்ளது.

விருதுநகர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரனும், பாஜக சார்பில் ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். அந்த வகையில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் வெற்றிபெற்றார். இதனைதொடர்ந்து விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடந்துள்ளது என்றும்,

அத்துடன் விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்று தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்திருந்த நிலையில் தற்போது இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

அந்த வகையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் முடிவுகளுக்கான கோப்புகள் குடியரசு தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் தொடர்பான ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது என்றும், மேலும் தேர்தல் ஆணையம் விரும்பினாலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட முடியாது என்றும்,

மாணவர்களுக்கு அடுத்த குட் நியூஸ் – தமிழ்ப்புதல்வன் திட்டம் எப்போது தொடக்கம்? முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு!!

அத்துடன் தோல்வியடைந்த வேட்பாளர் விரும்பினால் நீதிமன்றம் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment