ஆஸ்கர் விருதுக்கு 6 தமிழ் திரைப்படங்கள் பரிந்துரை – இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவிப்பு – எந்தெந்த திரைப்படங்கள் தெரியுமா ?

தற்போது ஆஸ்கர் விருதுக்கு 6 தமிழ் திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சினிமாவில் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் என அழைக்கப்படும் அகாடமி விருதுகள் திரைப்படத் துறைக்கான கலை மற்றும் தொழில்நுட்பத் தகுதிக்காக இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் ஆண்டுதோறும் அகாடமியின் வாக்களிக்கும் உறுப்பினர்களின் மதிப்பீட்டின்படி, சினிமா சாதனைகளில் சிறந்து விளங்குவதை அங்கீகரிப்பதற்காக அமெரிக்காவில் உள்ள அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (AMPAS) மூலம் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

மேலும் ஆஸ்கார் விருதுகள் திரைப்படத் துறையில் மிகவும் மதிப்புமிக்க விருதுகளாக பரவலாகக் கருதப்படுகின்றன.

அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு 6 தமிழ் திரைப்படங்கள் உள்பட 28 திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும் இவற்றுள் 10 இந்தி படங்களும், 5 மலையாளப்படங்களும், 3 தெலுங்கு, மராத்திய படங்களும் ஒரு ஒரிய படமும் அடங்கும்.

செம டுவிஸ்டுடன் வெளியான கார்த்தியின் மெய்யழகன் பட டிரைலர் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இதனையடுத்து மகாராஜா, தங்கலான், வாழை, கொட்டுக்காளி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜமா ஆகிய 6 படங்கள் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொட்டுக்காளி திரைப்படம் ரஷ்ய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment