அடுக்குமாடி குடியிருப்பில் திடீர் தீ விபத்து.., அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மக்கள்.., எங்கே? என்ன நடந்தது?

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மெட்சல் மல்கஜ்கிரி மாவட்டத்தில் இருக்கும் குத்புல்லாபூர் என்ற பகுதியில்   அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. கிட்டத்தட்ட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் அந்த குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று  (28-02-24) இந்த குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், உடனே கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட பல மணி நேர  போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு துறையினர்  தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக  இந்த தீ விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘மயிர்’ பாடல் இது.., சிவா நடித்த “சலூன்” படம் குறித்து வெளியான முக்கிய தகவல்.., விமர்சிக்கும் நெட்டிசன்கள்!!

Leave a Comment