தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு விடுமுறை – எப்போது தெரியுமா? வெளியான அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 2 டாஸ்மாக் கடைக்கு விடுமுறை

தமிழகத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேலான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக சொல்ல போனால்  தமிழக அரசின் நிதி ஆதாரமாக டாஸ்மாக் நிர்வாகம் உள்ளது. தினசரி இங்கு கோடிக்கணக்கில் பணம் புழங்குவதால் மட்டுமே, அரசு கொண்டு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. tasmac shop holiday

இருந்தாலும் டாஸ்மாக் கடையை இழுத்து மூட வேண்டும் என்று மக்கள் பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்ப கொஞ்சம் கொஞ்சமாக டாஸ்மாக் கடைகளை மூடி வருவதாக கூறப்படுகிறது. எல்லா துறைகளிலும்  விடுமுறை இருந்தாலும் கூட மது கடைகளுக்கு வெறும் ௮ நாட்களுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. gandhi jayanti

Also Read: இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து அனுப்பப்படும் முக்கிய வீரர் – பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு!

அதுவும் அரசு விடுமுறை மட்டும் தான். அந்த வகையில் வருகிற அக்டோபர் 2ஆம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த, அந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே டாஸ்மாக் மட்டுமின்றி பார்கள், ஹோட்டல் பார்கள் என அனைத்தையும் மூட வேண்டும். மேலும் அரசின் உத்தரவை மீறி மது விற்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. 

இதையும் கொஞ்சம் படிங்க பாஸ்

குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பது குற்றம்

சேலம் – தஞ்சாவூரில் டைடல் நியோ பார்க்

இனி பிரசாதம் தயாரிக்க இந்த நெய்தான் –  அரசு போட்ட அதிரடி உத்தரவு!

கல்யாணத்திற்கு பிறகு வீட்டோட மாப்பிள்ளையாக செல்லும் ஆண்கள்?

Leave a Comment