கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை – சட்ட வரைவு மசோதாவிற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் !

தற்போது கர்நாடகாவில் கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என்ற சட்ட வரைவு மசோதாவுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடகாவில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனங்களில் உள்ள மேலாண்மை பதவிகளில் 75 சதவீதமும், இதனை தொடர்ந்து அதனை தொடர்ந்து அதற்க்கு கீழுள்ள பதவிகளில் 50 சதவீதம் கன்னடர்களுக்கு முன்னுரிமை தரும் சட்ட வரைவு மசோதாவுக்கு கர்நாடகா மாநில அமைச்சரவை தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது.

கன்னடர்களுக்கே முன்னுரிமை என்ற ட்ட வரைவு மசோதாவை தொடர்ந்து இதற்கான தகுதிகளை தற்போது அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கர்நாடகாவில் 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். அத்துடன் கன்னடத்தில் பேச, எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்கள் அனைவரும் கன்னடர்கள் என்று மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிடுகிடுவென உயர்ந்த தக்காளி விலை – ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? – மக்கள் அவதி!

அதே சமயம் மேல்நிலைப்பள்ளிகளில் கன்னடத்தை ஒரு பாடமாக படித்தவர்கள் கன்னட மொழித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Leave a Comment