இவ்வளவு ஆடம்பர கொண்டாட்டம் தேவையா ? பிரபலங்கள் யாருக்கும் வெட்கமே இல்லையா – அம்பானி வீட்டு திருமணத்தை விமர்சித்த பிரசாந்த் பூஷன் !

இவ்வளவு ஆடம்பர கொண்டாட்டம் தேவையா ?. ரிலைன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் இவர்கள் இருவருடைய திருமண விழா குஜராத் மாநிலத்தில் ஜாம் நகரில் மிகவும் ஆடம்பரமான முறையில் உலகின் முக்கிய பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் என அனைவரும் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டது இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த திருமண விழாவை திரும்பி பார்க்க வைத்துள்ளது. அந்த வகையில் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் அம்பானி வீட்டு திருமண விழாவை பற்றி தெரிவித்த கருத்து பேசுபொருளாகியுள்ளது.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனின் அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற முகேஷ் அம்பானியின் மகனான ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமண விழாவை பற்றி தெரிவித்த கருத்துக்கள் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மேலும் பிரசாந்த் பூஷனின் கூறியதாவது

Google நிறுவனம் CEO சுந்தர் பிச்சை திடீர் பதவி நீக்கம்? காரணம் என்ன தெரியுமா?.., வெளியான ஷாக் தகவல் !!

அம்பானி மகனின் ஆடம்பரமான திருமணம் நாட்டிற்கு அவசியமான ஒன்றா? என விமர்சித்துள்ளார். இந்த திருமண விழா அதிகப்படியான செல்வம் மற்றும் அதிகாரத்தின் வெளிப்பாடாக உள்ளது. பிரபலங்கள் எல்லாம் போய் நிற்பது வெட்கமாக உள்ளது. மேலும் ஊடகங்களும் ஓடியாடி உழைப்பது அவை எந்த அளவிற்கு விலை பொய் உள்ளன என்பதை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறது என பிரசாந்த் பூஷன் விமர்சித்துள்ளார்.

Leave a Comment