தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக ! முக்கிய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர் – அதிகாரபூர்வமாக அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி !

தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், SDPI, புரட்சி பாரதம் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது.

இந்நிலையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணி போட்டியிடும் 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

அரசியலில் குதிக்கும் சந்தன கடத்தல் வீரப்பனின் மகள்.., அதுவும் எந்த கட்சி தெரியுமா?.., வெளியான முக்கிய தகவல்!!

இதன் அடிப்படையில் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி தொகுதிகளுக்கு எஸ்.பி. வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், சென்னை வடக்கு தொகுதிக்கு ஜெயக்குமார், திருச்சிக்கு விஜயபாஸ்கர், காஞ்சிபுரத்திற்கு வளர்மதி ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment