மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி – துணை பிரதமர் பதவியை அளிக்க பாஜக முடிவு !

மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மத்தியில் கூட்டணி ஆட்சி அமைய அதிக வாய்ப்புள்ளது.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து பாஜக தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தலில் கூட்டணிக்கட்சிகளுடன் சேர்த்து 291 இடங்களை கைப்பற்றியுள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

மேலும் ஆட்சியமைக்க உரிமை கோருவது தொடர்பாக தற்போது நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது பாஜக ஆட்சியமைக்க தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவு தேவைப்படுவதால் இரண்டு கட்சிகளும் மக்களவை சபாநாயகர் பதவியை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று பாஜகவிற்கு நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளன.

மாநில கட்சி அந்தஸ்தை தொட்ட “நாம் தமிழர் கட்சி” … தேர்தல் ஆணையம் அறிவிப்பு.. நாதக கட்சியினர் கொண்டாட்டம்!!

இதன் அடிப்படையில் ஆட்சியை தக்க வைக்க ஆதரவு தரும் கட்சிக்கு துணை பிரதமர் பதவியை கொடுக்க பாஜக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment