“நாடோடிகள் 2” பட நடிகை வீட்டில் திருட்டு – அடக்கடவுளே… இதையெல்லாமா திருடுவாங்க? – 2 பேர் கைது!

சசிகுமார் நடித்த “நாடோடிகள் 2” பட நடிகை வீட்டில் திருட்டு: தமிழ் சினிமாவில் காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி. இதையடுத்து  நாடோடிகள் 2, ஏமாலி  உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்பொழுது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கோவையில் வடவள்ளி மருதம் சாலையில் இருக்கும் வீட்டில் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் வீட்டில் வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் காணாமல் போனதை தொடர்ந்து, அதை தேடும் போது என்னுடைய பாஸ்போர்ட்டும் காணாமல் போனது எனக்கு தெரிய வந்தது.

இதையடுத்து வீடு முழுக்க அவர் தேடி பார்த்துள்ள நிலையில், எங்கேயும் கிடைக்கவில்லை. இதனால் அவர் காவல்துறையிடம் சென்று புகார் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து போலீஸ் விசாரணையை தொடங்கிய நிலையில், நடிகை வீட்டில் வேலை பார்த்த தொண்டாமுத்தூர் அடுத்த குளத்து பாளையத்தை சேர்ந்த செல்வி மீது எழுந்த சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து விசாரித்துள்ளனர்.

Also Read: “பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகைக்கு திருமணமா? – மாப்பிள்ளை யார் தெரியுமா? – கமுக்கமாக நடந்த நிச்சயதார்த்தம்!

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனை தொடர்ந்து  நடத்திய விசாரணையில், செல்வி தனது தோழியுடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து செல்வியையும், அவருடைய தோழியையும் காவல்துறை கைது செய்தனர். 

Leave a Comment