பிரதமர் வீட்டை முற்றுகையிட்ட ஆம் ஆத்மியினர்.., குண்டுகட்டாக தூக்கிய டெல்லி காவல்துறை., பரபரப்பு!!!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். குறிப்பாக தமிழகத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாக  போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அவருக்கு ஆதரவாக பல அரசியல் பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவாலை விடுதலை செய்ய கோரி இன்று டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் வீட்டை முற்றுகையிட ஆம் ஆத்மி கட்சியினர்  தெரிவித்தனர்.  

ஆனால் இந்த போராட்டத்துக்கு டெல்லி காவல்துறை சார்பில் அனுமதி இல்லை என தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியினர் காவல்துறை தடையை மீறி பிரதமர் மோடி வீட்டை முற்றுகையிட முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஏற்கனவே அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சியினரை குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் பிரதமர் மோடி இருந்த பகுதியில் அதிகப்படியான போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பக்தர்கள் கவனத்திற்கு.., இவர்கள் வெள்ளியங்கிரி மலையேர தடை?.., வனத்துறையினர் அதிரடி அறிவிப்பு!!

Leave a Comment