சூப்பர் ஸ்டார் ஆரம்பித்து வைத்த செயலி – இழுத்து  மூடும் சௌந்தர்யா ரஜினிகாந்த் – என்ன காரணம் தெரியுமா?

Kollywood king சூப்பர் ஸ்டார் ஆரம்பித்து வைத்த செயலி: தற்போதைய காலகட்டத்தில் செல்போன் வைத்திருக்கும் பெரும்பாலான மக்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ், வாட்சப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதே போல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆரம்பித்த  ஆப் தான்  ‘ஹூட்’ என்ற குரல் வழி சமூக வலைதள செயலி.

இந்த செயலியை சூப்பர் ஸ்டார் தான் தொடங்கி வைத்தார். அவர் தான் முதலில் பேசி தனது குரலை பதிவு செய்தார். அவரை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான், ஆனந்த் மகேந்திரா, தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், கௌதம் கம்பீர் உள்ளிட்ட பலரும் இந்த செயலில் இணைந்தனர்.

மேலும் இந்த செயலி கிட்டத்தட்ட  தமிழ் உட்பட 15 இந்திய மொழிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த செயலி குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள் மழை கன்பார்ம் – வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை!!

அதாவது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தொடங்கிய  ‘ஹூட்’   செயலி போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்த செயலியை மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் இது குறித்து ஐஸ்வர்யா தரப்பில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. மேலும் சமீபத்தில் கூட  போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் Koo என்கிற செயலி சமீபத்தில் மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment