நடிப்பை விட்டுவிட்டு ஹோட்டலில் பில் போடும் வேலை பார்க்கும் ரோஜா சீரியல் நடிகை – ரசிகர்கள் ஷாக்!!

சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான தொடரில் நடிப்பை விட்டுவிட்டு ஹோட்டலில் பில் போடும் வேலை பார்க்கும் ரோஜா சீரியல் நடிகை என தகவல் வெளியாகியுள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சீரியல் தான் ரோஜா. இந்த சீரியலில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி. இந்த சீரியலை தொடர்ந்து நளதமயந்தி சீரியலில் நடித்து வந்தார். தற்போது அதிலும் சமீபத்தில் அவர் இறந்தது போல் காட்டி சீரியலை முடித்தனர்.. அதன் பின்னர் அவர் என்ன ஆனார் என்று பலரும் கேட்டு வந்த நிலையில், தற்போது ஷாக்கிங் போட்டோ ஒன்று வெளியாகிஉள்ளது.

அதாவது, நடிகை பிரியங்கா நடிப்பை விட்டு மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் ஹோட்டல் ஒன்றினை திறந்துள்ளார். அங்கு அவர் பில்போடும் வேலையை செய்யும் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சோகத்தில் இருந்து வருகின்றனர்.

சமந்தா போல அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட  கேரளா ஸ்டோரி நடிகை – அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!

மேலும் இவர் மலேசியாவைச் சேர்ந்த காதலரை திருமணம் செய்துகொண்டு கொஞ்ச மாதத்திலேயே பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment