காமெடி நடிகர் எஸ்.வி. சேகருக்கு சிறை தண்டனை.., பத்திரிகையாளர் பற்றி அவதூறாக பேசிய வழக்கு – நீதிபதி அதிரடி உத்தரவு!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் எஸ்,வி சேகர். தற்போது அரசியலில் களமிறங்கி செயலாற்றி வருகிறார். இதனை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் குறித்து தரக்குறைவாக பேசி  பேஸ்புக்கில் பதிவு செய்தார். அப்போது அந்த பதிவு பெரும் பேசும் பொருளாக மாறிய போது பாதிக்கப்பட்ட பெண் அவர் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில், போலீஸ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திற்கு  கொண்டு செல்லப்பட்டது.

தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக நிலுவையிலிருந்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை தொடர்ந்து எஸ்,வி சேகர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி ஜெயவேல், அவருக்கு ரூபாய் 15,000 அபராதம் மற்றும் ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தண்டனைக்கு எதிராக நடிகர் எஸ்,வி சேகர் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் கூட்டம்.., உறுதி மொழி எடுத்த தவெக தலைவர் விஜய் மற்றும் நிர்வாகிகள்!!

Leave a Comment