T20 உலகக்கோப்பை போட்டிகள் 2024 – அடுத்தடுத்து வெளியேறிய முன்னணி அணிகள் !

தற்போது T20 உலகக்கோப்பை போட்டிகள் 2024 அமெரிக்காவிலும், மேற்கிந்திய தீவுகளிலும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் முன்னணி கிரிக்கெட் அணிகளை காட்டிலும் அடுத்த நிலையில் உள்ள சிறிய அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் உலகின் முன்னணி கிரிக்கெட் அணிகள் போட்டியிலிருந்து வெளியேறிவருவது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து இலங்கை அணி நேற்று வெளியேறியது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற போட்டியில் PNG அணி ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியதால் நியூசிலாந்து அணி டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

குவைத் தீ விபத்து விவகாரம் – உயிரிழந்த தமிழர்களின் உடல் கொச்சிக்கு வந்தடைந்தது!!

இதனை தொடர்ந்து பாகிஸ்தான் அணியும், இங்கிலாந்து அணியும் அடுத்த அணிகளின் தோல்வியை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியானது முன்னணி அணிகளுக்கு சோதனை தரும் விதமாக அமைந்துள்ளது.

Leave a Comment