தமிழக அரசு வழங்கும் ரூ.2000 வெள்ள நிவாரணம் – டோக்கன் எப்போது? வெளியான முக்கிய தகவல்!

ஃபெஞ்சல் புயலால் பெரும் பாதிப்புக்கு உள்ளான விழுப்புரம் மாவட்டத்தில், தமிழக அரசு வழங்கும் ரூ.2000 வெள்ள நிவாரணம் தொடர்பான டோக்கன் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

நிவாரண தொகை:

தமிழகத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி,தருமபுரி உள்ளிட்ட பகுதிகளில் மழையின் அளவு வழக்கத்தை விட மிக அதிகமாக காணப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக ரூபாய் 2000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். ஆனால், இந்த நிவாரண தொகை எப்போது கிடைக்கும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில் நிவாரண தொகைக்கான டோக்கன் எப்போது வழங்கப்படும் என்பது குறித்து வருவாய் துறை செயலாளர் அமுதா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதாவது விழுப்புரம் மாவட்டத்தில் வெள்ள பாதிப்பு நிவாரணம் ரூ.2000 பெற மக்களுக்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த  டோக்கன் விநியோகிக்கப்பட்டு அடுத்த 2 முதல் 3 நாட்களில் அனைவருக்கும் நிவாரண தொகை வழங்கப்படும் என்று வருவாய் துறை செயலாளர் அமுதா தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை அறிய இதை கிளிக் செய்யுங்கள்

சென்னை Airport-ல் பார்க்கிங் கட்டணம் உயர்வு- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
ENG – NZ அணிகளுக்கு 3 புள்ளி குறைப்பு – நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு செல்லுமா?
பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு – என்ன காரணம் தெரியுமா?
தமிழகத்தில் நாளை (06.12.2024) மின்தடை பகுதிகள் ! TNEB வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !
டிசம்பர் 12ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு லீவு –  வெளியானது அசத்தல் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?
மன்சூர் அலிகான் மகன் துக்ளக் கைது – கோலிவுட்டில் பரபரப்பு!
TNEB வெளியிட்ட நாளை மின்தடை (05.12.2024) பகுதிகள் ! TANGEDCO வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு !
அதிக ஆபத்துள்ள உணவு “தண்ணீர் பாட்டில்” – FSSAI திடீர் முடிவு!

Leave a Comment