தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை – மஞ்சள் அலெர்ட் கொடுத்த வானிலை மையம்!

வெதர் ரிப்போர்ட் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வரும் நிலையில் தற்போது ஒரு சில பகுதிகளில் கனமழை1 வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் ரெட் அலர்ட் கொடுத்து வருகிறது வானிலை மையம். இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” தமிழகத்தில் முக்கிய மாவட்டங்களான தேனி, தென்காசி, திருநெல்வேலி, நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய 8 மாவட்டங்களுக்கு இன்று கனமழை கொட்டி தீர்க்க போகிறது.

இதனால் பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாளையும் தேனி, தென்காசி கன்னியாகுமரி, திருப்பூர், திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்யும், அதே போல் நாளை மறுநாள்(ஜூன் 26) அன்றும் மேற்கண்ட ஆறு மாவட்டங்களிலும் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. weather report – tamilnadu weather center department

தமிழ்நாடு ஆசிரியர்களுக்கு இலவச லேப்டாப் 2024 : பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

  1. weather report news in tamil ↩︎

Leave a Comment